புதிதாக மத்தியில் பொறுப்பேற்கும் அரசு, தமிழகஅரசுக்கு முழு ஒத்துழைப்புவழங்கும் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவிடம் உறுதியளித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொலைபேசியில் பேசிய மோடி இதை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றதற்காக பாஜகவின் பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடிக்கு வாழ்த்து தெரிவித்து ஜெயலலிதா சனிக்கிழமை கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதத்துக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்முதல்வர் ஜெயலலிதாவிடம் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.அவர் பேசும்போது, முதல்வரின்கடிதத்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அதோடு, தமிழகத்தில் மக்களவைத்தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றி பெற்றதற்காகஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளைக் கூறினார். இந்தியாவின் பிரதமராக மோடி வெற்றிகரமாக செயலாற்ற ஜெயலலிதாவும்தனது வாழ்த்துகளைக் கூறினார். அப்போது, புதிதாக பொறுப்பேற்க உள்ள மத்திய அரசுக்கும்,தமிழகத்துக்கும் இடையே முழுமையான ஒத்துழைப்பு இருக்கும் எனஜெயலலிதாவிடம்நரேந்திர மோடி உறுதியளித்ததாக தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி