ஆர்.டி.இ., விண்ணப்பம் பெறநாளை கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2014

ஆர்.டி.இ., விண்ணப்பம் பெறநாளை கடைசி நாள்

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், விண்ணப்பம் பெற, நாளை கடைசி நாள். இதுவரை, 20 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், வினியோகிக்கப்பட்டு உள்ளன.ஆர்.டி.இ., சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள், தங்களிடம் உள்ள நுழைவு வகுப்பு இடங்களில், 25 சதவீதத்தை, ஏழை, எளிய, பொருளாதாரத்தில் பின் தங்கிய பெற்றோரின் குழந்தைகளுக்கு, ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவ, மாணவியரின் கல்வி செலவை, மத்திய அரசு ஏற்கிறது. 'ஆர்.டி.இ., இட ஒதுக்கீட்டின் கீழ், கடந்த, 3ம் தேதி முதல், 18ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டது.பின், விண்ணப்ப வினியோகத்தை, வரும் 31ம் தேதி வரை, நீட்டிப்பு செய்து அறிவித்தது.இதுகுறித்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரக வட்டாரம் கூறுகையில், 'இதுவரை, 20 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. தகுதி வாய்ந்த பெற்றோர், 31ம் தேதி மாலை வரை, விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து, பள்ளிகளில் அளிக்கலாம்' என, தெரிவித்தது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி