மதுரை மாவட்ட கல்வித்துறையில் பல முக்கிய பணியிடங்கள் பொறுப்பு அலுவலர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன.
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக இருந்த ரவி (மேல்நிலை பள்ளிகள்) விருப்ப ஓய்வு பெற்றார்.
சீனிவாசன் (உயர் நிலை பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார் (தற்போது ஓய்வு).இப்பணியிடங்களுக்கு குலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லோகநாதன்,விரகனுார் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கரநாராயணன் ஆகியோர் பொறுப்பு நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலுார் கல்விமாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.) சீமான் பதவி உயர்வு பெற்று, கிருஷ்ணகிரி எஸ்.எஸ்.ஏ.முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சங்கரநாராயணன் டி.இ.ஓ.வாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். இவரிடத்தில் மதுரை சத்தியமூர்த்திநகர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பால்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை ஆய்வாளர் பணியிடங்களும் காலி: அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கும் பள்ளிகள் துணை ஆய்வாளர் பணியிடங்கள் மதுரை, மேலுார், உசிலம்பட்டிஆகிய மூன்று கல்வி மாவட்டங்களிலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. இப்பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி