கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் திருநங்கைகளுக்கு இடம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2014

கல்லூரி சேர்க்கை விண்ணப்பத்தில் திருநங்கைகளுக்கு இடம்!


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்து, கல்லூரி சேர்க்கை தொடங்கியுள்ள இந்நேரத்தில்,
சென்னை கிறிஸ்தவ கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்கலையும், ஒரு புரட்சிகர திட்டத்தை கொண்டுவந்துள்ளன.

தங்களின் விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பத்தில், பாலினம் குறித்து குறிப்பிடும்இடத்தில், மூன்றாவது பாலினத்தை(திருநங்கை) குறிப்பிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 15ம் தேதி, திருநங்கைகளை, மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். அதன் அடிப்படையில், அவர்கள், அங்கீகாரத்தின் அடிப்படையில், பணியிடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நுழைந்து செயல்படும் வாய்ப்பை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திருநங்கைகள் தொடர்பாக, சில முன்னோடி நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென்று ஒரு பிரத்யேக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளதோடு, குடும்ப அட்டைகளில், அவர்களுக்கென்று T ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. manithargalai pirantha thirunangaikalukku magathana vetri. vazthukkal bro.and sis. inimelavathu ungal vazkkai nilai uyaravendum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி