புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2014

புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை பாராட்டுங்கள்: தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை.


பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த,அதிக புத்தகங்கள் படிக்கும் சிறுவர்களை,பள்ளியிலே பாராட்டுங்கள், என, தலைமை ஆசிரியர்களை, தொடக்க கல்வி இயக்குனர் கேட்டு உள்ளார்.
ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் பலரும், கம்ப்யூட்டர், மொபைல் போன்களில் கேம்ஸ் விளையாடுவது,"டிவி' யில் சிறுவர்களுக்கான சேனல்களை பார்த்தே, நாள் முழுவதும் முழ்கி போவது போன்ற காரணங்களால், வாசிப்பு திறன் குறைவாக காணப்படுகிறது.

இதுபோன்ற குறைபாடுகளால், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட, தாய்மொழியை சரளமாக வாசிக்க முடியாமல், திணறுகின்றனர். இந்நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,உதவி கல்வி அலுவலகம் மூலம், தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், தொடக்க பள்ளிகளில், மாணவர்கள் வாசிப்பு திறனை மேம்படுத்திட, அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை, மாணவர்கள் படிக்கும் வகையில் சூழ்நிலைகளை ஏற்படுத்தி தரவேண்டும்.மாணவர்களின் கைகளுக்கு எட்டும் வகையில், வகுப்பறையில் புத்தங்களை தொங்க விடவேண்டும். மதிய உணவு இடைவேளையின் போது, புத்தகங்களை படிக்க ஊக்கு விக்க வேண்டும்.

புத்தகங்களை படித்து அதன் கருத்துக்களை ,மாணவர்களுக்குள் பகிர்ந்து கொள்ள, வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். அதிக புத்தங்களை வாசிக்கும் மாணவ, மாணவியர்களை, திங்கள் கிழமை தோறும் நடைபெறும் காலை வழிபாட்டில்,தலைமை ஆசிரியர் பாராட்ட வேண்டும். பள்ளி ஆய்வுக்கு செல்லும் உதவி கல்வி அலுவலர்கள், மாணவர்கள் புத்தங்கள் எடுத்து படிப்பதை ஆய்வு செய்யவேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி