நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் திறந்தவெளி அரங்கில் மாலை 6 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை 84 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.மோடி பதவியேற்கவுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வான் வெளி பாதுகாப்பில் இந்திய விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உயரமான கட்டடங்களில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குடியரசு தலைவர் மாளிகையை பார்வையிட 3 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தெற்கு நீர்வீழ்ச்சி சாலைகள், நார்த் அவின்யு மார்க், சர்ச் ரோடு உள்ளிட்ட சாலைகள் மாலை 4 மணி முதல் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் அண்டை நாடுகளின் தலைவர்கள் உட்பட 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி