தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகின.
இதில் 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in
ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம்.பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 பேர் எழுதினர்.
இதில், 5 லட்சத்து 30 ஆயிரத்து 462 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 8 ஆயிரத்து 414 பேர் மாணவிகள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 179 தேர்வு மையங்களில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெற்றது.
Congratulations for all passed students
ReplyDelete