எஸ்பிஐயில் புதிதாக 7,000 பேருக்கு வேலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2014

எஸ்பிஐயில் புதிதாக 7,000 பேருக்கு வேலை


நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதி ஆண்டில் 7 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் அந்த வங்கியின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு அதிகாரிமிஸ்ரா இதைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த 4 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி 40 ஆயிரம் பேரை வேலையில் சேர்க்க உள்ளதாகக் கூறிய அவர், அதே காலத்தில் சுமார் 35 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சம்பளவிஷயத்தில் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் இடையே வித்தியாசம் இருந்தபோதிலும், பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் அதிக அளவில் பணி மாறவில்லை என்றும் மிஸ்ரா கூறினார். வங்கிப் பணிகளில் இளம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் முக்கியத்துவத்தால் அவர்கள் கவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி