ஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்; 10-ல் பொது பட்ஜெட் தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2014

ஜூலை 8-ல் ரயில்வே பட்ஜெட்; 10-ல் பொது பட்ஜெட் தாக்கல்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை குழு அறிவித்துள்ளது.
புதிய அரசு பதவியேற்ற பிறகு 16- வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற்றது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட் மற்றும் இடைக்கால பொது பட்ஜெட் ஆயுட்காலம் முடிவடையவுள்ளதை அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.

2014- 15-ம் ஆண்டுக்கான மத்தியரயில்வே பட்ஜெட் ஜூலை 8-ம் தேதியும், பொது பட்ஜெட் ஜூலை 10- ம் தேதியும் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9-ம் தேதியன்று பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு மசோதா, டிராய் சீர்திருத்த மசோதா, செபி மசோதா ஆகியனவற்றை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையில், ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னரே, ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி