மாணவரே இல்லை; கலந்தாய்வு உண்டு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2014

மாணவரே இல்லை; கலந்தாய்வு உண்டு.


சிவகங்கையில் ஒரு மாணவர் கூட இல்லாத இரு அரசு பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.
சிவகங்கை மாவட்டத்தில், இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. ஒன்றியம் வாரியாக காலியிட விவரங்கள் அறிவிக்கப்பட்டன. கண்ணங்குடி ஒன்றியத்தில் கும்மங்குடி, உடையனசமுத்திரம், மாடக்கோட்டை; திருப்புத்தூரில் என்.எம்.பள்ளி, திருக்களாப்பட்டி, கீழநிலை, அச்சரம்பட்டி ஆகிய பள்ளிகள் காலியிடமாக அறிவிக்கப்பட்டன. இதில், 'கும்மங்குடி, என்.எம்.பள்ளிகளில் மாணவர்களே இல்லை' என அறிவித்து இருந்தனர்.

யாரும் இந்த பள்ளிகளை தேர்வு செய்யவில்லை. தொடக்கக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கடந்த 2 ஆண்டாகவே இரு பள்ளிகளிலும் மாணவர்களே இல்லை. இப்பள்ளிகளைமூடுவதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மாணவர்கள் இல்லை என்றாலும், காலியிடமாக அறிவிக்க முடியாது. 'காலியிடம் மறைக்கப்பட்டு விட்டது' என புகார் எழும் என்பதால், 'மாணவர் இல்லை' என்பதை குறிப்பிட்டு இருந்தோம்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி