டிஎன்பிஎஸ்சி தேர்ந்து எடுத்த 1,395 இளநிலை உதவியாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2014

டிஎன்பிஎஸ்சி தேர்ந்து எடுத்த 1,395 இளநிலை உதவியாளர்கள் அரசு பள்ளிகளில் நியமனம்


தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வை நடத்தியது. அதன் மூலம் 1,395 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் அதாவது அரசு பள்ளிக்கூடங்களில் நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுபடி பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2013-2014-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தொகுதி 4-ல் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1395 பணிநாடுநர்களுக்கான நியமன ஆணை வழங்கும் கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. பணிநாடுநர்கள் தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக கலந்தாய்வு மையத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (பணிநாடுநர்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டம்) பணிநாடுநர்களுக்கான கலந்தாய்வு 25-ந் தேதி அன்று காலை 11 மணிக்கும், இக்கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடம் இல்லாததால் பணியிடம் கிடைக்கப்பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும் 26-ந் தேதி காலை 9 மணிக்கும் பணிநாடுநர்களின் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.கலந்தாய்வில் கலந்துகொள்ளும் பணிநாடுநர்கள் கலந்தாய்வு மையத்திற்கு கலந்தாய்வுநடைபெற உள்ள ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருகைதர வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றுகள், சாதிச்சான்று மற்றும் இதர ஆவணங்களை தவறாமல் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி