குரூப் 1 முதல்நிலை தேர்வு கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2014

குரூப் 1 முதல்நிலை தேர்வு கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு


குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-1 பதவியில் அடங்கிய துணை கலெக் டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33) மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் (10) ஆகிய 79 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வை கடந்த 20ம் தேதி நடத்தியது.
இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 557 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், வெறும் 45 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதாவது 73,173 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். சென்னையில் 14,983 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.net பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் வருகிற 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இது குறித்து டி.என். பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆன்சர் கீ தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்யும். அதன் பின்னர், புதிய ஆன்சர் கீ வெளியிடப் படும். தேர்வு முடிவுகளை குறைந்த பட்சம் 2 அல்லது 3 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி