தமிழகத்தில் இரண்டே ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 54 அரசு கல்லூரிகள் தொடங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்டப்பேரவையில் பாராட்டு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2014

தமிழகத்தில் இரண்டே ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 54 அரசு கல்லூரிகள் தொடங்க முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்டப்பேரவையில் பாராட்டு.


தமிழகத்தில் இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனையாக, இரண்டே ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உட்பட 54 அரசு கல்லூரிகள் தொடங்க, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நடவடிக்கை எடுத்திருப்பதாக சட்டப்பேரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன், இவ்வாறு பாராட்டுத் தெரிவித்தார். போடி, தருமபுரி, தஞ்சாவூர், திருச்சி - ஸ்ரீரங்கம் ஆகிய 4 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகளை தொடங்குவதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 212 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கல்வித்துறைக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவைபோல, வேறு எவரும் சிறப்புகள் செய்ததில்லை என அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் ராஜலட்சுமி புகழாரம் சூட்டினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி