நாடு முழுவதும் 930 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2014

நாடு முழுவதும் 930 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல்


நாடு முழுவதும் 930 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 105 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் 96 ஐ.பி.எஸ் பணியிடங்களும், ஒடிஷாவில் 75 ஐ.பி.எஸ் பணியிடங்களும் காலியாக உள்ளன. தமிழகத்தில் 263 ஐ.பி.எஸ் பணியிடங்களில் 52 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறினார்.மகாராஷ்ட்ராவில் 72 இடங்களும், ஆந்திராவில் 51 இடங்களும் ஐ.பி.எஸ் எனப்படும் இந்திய காவல் துறை பணியில் இடங்கள் நிரப்பப்படவில்லை. நாடு முழுவதும் 4 ஆயிரத்து 728 ஐ.பி.எஸ் பணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது 3 ஆயிரத்து 798 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி