பேரவையில் நேற்று கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு விக்கிரவாண்டி ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது:
தனியார் கல்லூரி ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அமைச்சர் பழனியப்பன்: பண பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது. ஆசிரியர் தேர்வாணையம் இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது. தனியார் கல்லூரிகள் அதை செய்வதில்லை.
ராமமூர்த்தி: பல்கலைக் கழக ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. எனவே கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக உயர்த்த வேண்டும். பழனியப்பன்: கல்வித் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
ராமமூர்த்தி: தமிழ்நாட்டில் 3500 கல்லூரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
பழனியப்பன்: ஏற்கனவே 1900 பணியிடம் நிரப்ப உத்தரவிடப்பட்டது. 1623 பணியிடம் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
ராமமூர்த்தி: சமச்சீர்கல்வியை கொண்டுள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். மெட்ரிக் பள்ளிகளுக்கு தனி துறை இருக்க கூடாது. அமைச்சர் வீரமணி: தற்போதுள்ள முறையில் குறைபாடு இருந்தால் கூறுங்கள் அரசு நடவடிக்கை எடுக்கும்.
திண்டுக்கல் பாலபாரதி(மார்க்சிஸ்ட்): சமச்சீர் கல்வியில் அனைத்தும் சமம் என்றுசொல்லும் போது மெட்ரிக் பள்ளிகளுக்கு தனித் துறை ஏன்? அந்த துறையை கலைக்க வேண்டும். அப்போது தான் அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேருவார்கள்.மெட்ரிக் பள்ளி களில் பல பாடப் பிரிவுகள் இருப்பதால் அதிக அளவு மாணவர்கள் அங்குசெல்கிறார்கள்.
வீரமணி: இந்த பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 1 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ராமமூர்த்தி: பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
வீரமணி: தேவையான அளவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ராமமூர்த்தி: ஈரோட்டில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக்க வேண்டும். வீரமணி: அரசு விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மாற்றப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி