அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் பதிவுதாரர்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 31, 2014

அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் பதிவுதாரர்கள்?


பதிவு மூப்பை மீண்டும் பெறும் சிறப்பு சலுகைக்கான அரசு உத்தரவை விரைவாக வெளியிடவேண்டும், என பதிவுதாரர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த கடந்த 2011 முதல் 2013 வரை மூன்றாண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், தங்கள் பதிவு மூப்பை மீண்டும் பெற சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் மோகன் கடந்த 11ம் தேதி அறிவித்தார். இதையடுத்து,வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதற்கான அரசு உத்தரவு விரைவில் வந்துவிடும், அதன் பிறகு வாருங்கள் என அதிகாரிகள் கூறி அனுப்புகின்றனர்.

ஆசிரியர்தேர்வு வாரியத்தில் தேர்ச்சி பெற்ற பலர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்காமல் உள்ளனர்இது போன்றவர்களுக்கும், மாத உதவித் தொகை பெறுவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அரசு உத்தரவுக்காக பதிவுதாரர்கள் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி