குறு வட்ட, மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு முன், விளையாட்டுக்கான நிதியை வழங்காததால், அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடந்தாண்டு முதல் குறு வட்ட, மாவட்ட, மண்டல, மாநில தடகள மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்த அரசு நிதி வழங்குகிறது.
குறு வட்ட போட்டிகள் ஜூலையில் துவங்கும் என்றாலும், கடந்தாண்டுக்கான ரூ.10 கோடி நிதி, இந்தாண்டு ஜனவரியில் கிடைத்தது.தற்போது இந்த கல்வியாண்டுக்கான குறுவட்ட போட்டிகள் அந்தந்த மாவட்ட அளவில் சிலநாட்களில் நடக்கவுள்ளன. அரசு நிதி வழங்குவதால் அரசுப் பள்ளிகளில் தான் போட்டிகள் நடக்க வேண்டும். அதுவும் அரசுப் பள்ளிகளே போட்டிகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டிகளை காண்பதன் மூலம், உற்சாகமடைந்து போட்டிகளில் பங்கேற்பர் என்ற அரசின் நோக்கம் சரிதான்.ஆனால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. மைதானம் இருக்கும் பள்ளிகளும், மற்ற பள்ளிகளை விட துாரத்தில் இருக்கின்றன. இதற்கு முன் போட்டிகளை முன்கூட்டியே பணம் செலவழித்து, தனியார் பள்ளிகளே நடத்தின. அரசுப் பள்ளிகளில் அரசின் நிதி வருவதற்கு முன், யார் பணம் தருவது என்ற குழப்பம் நிலவுகிறது.குறுவட்ட போட்டிகள் துவங்கும் முன்பே, அந்தந்த மாவட்டத்திற்கான நிதியை அனுப்பினால், அரசுப் பள்ளி தலைமையாசிரியர் சிரமமின்றி போட்டிகளை நடத்துவர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி