எங்கள் பிள்ளைகளையும் ** டாக்டராக்குவோம் *நரிக்குறவர் சமுதாய மக்கள்உறுதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 18, 2014

எங்கள் பிள்ளைகளையும் ** டாக்டராக்குவோம் *நரிக்குறவர் சமுதாய மக்கள்உறுதி.

தேவகோட்டை  - ஜூலை -   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு  தேவகோட்டை அருகில் உள்ள நரிக்குறவர்  இன பெண்கள்  திரளாக  தங்கள்பிள்ளைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிஆசிரியர்கள், மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி  தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில்   தேவகோட்டை அருகே உள்ள நரிக்குறவர் சமுதயாம்வாழும்    பகுதியில் கல்வி பயில்தல்,பெண் கல்வியின் அவசியம் குறித்து இன்றையசூழ்நிலையில் அறிந்திராத இக் குடும்பத்தினருக்கு பள்ளி மாணவிகள் தங்களின்தனிதிறமையினை வெளிப்படுத்தி கல்வியின் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.**                            இதன் தொடர்ச்சியாக  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை அருகில் உள்ளநரிக்குறவர்  இன பெண்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்கவைக்கவிருப்பமுடன் பெரும் கூட்டமாக வந்திருந்தனர்.அப்போது அவர்களிடையே பள்ளியின்தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பேசுகையில்,பள்ளிக்கு தொடர்ந்து மாணவர்களைநீங்கள் அனுப்ப வேண்டும் .அவ்வாறு அனுப்பினால் தான் அந்த பிள்ளைகளும்வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வெற்றிகரமான மனிதர்களாகஉருவெடுப்பார்கள்.தமிழக அரசு மாணவர்களுக்கு பல்வேறு விலையில்லா கல்வி தொடர்பானபொருட்களை வழங்கி வருகிறது.அவற்றை தாங்களும் தங்கள் பிள்ளைகளுக்குபயன்படுத்திகொள்ள வேண்டும் என பேசினார்.                                 
நரிக்குறவர் காலனியிலிருந்து வந்திருந்ததாய்மார்களில் பாண்டிமீனாள் ,விஜயராணி,பிரியா ஆகியோர் பேசுகையில் ,நாங்கள்வேலைக்காக பிள்ளைகளை படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு எங்கும் அழைத்துசெல்லமாட்டோம்.அவ்வாறு வேலைக்கு அழைத்து செல்லும் பெற்றோர்களை நாங்களேகாவல்நிலையத்தில் தெரிவித்து உரிய பாடம் கற்பிப்போம்.வந்திருக்ககூடியதாய்மார்களிடம் நாங்கள் பிள்ளைகளின் படிப்பை வீணாக்கமட்டோம் .இடையில் வேலைக்குஅழைத்து செல்ல மாட்டோம் என நாங்கள் எழுதி
வாங்கி  வைத்து உள்ளோம் . தொடர்ந்துஎங்கள்  பிள்ளைகள் பள்ளிக்கு  வருவார்கள்.நன்றாக படித்து வாழ்க்கையில்அவர்களும் மிகபெரிய அரசு பதவிகளுக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள்ஆசை.நாங்கள் தான் படிக்காமல் ஊர் ஊராக சுற்றி அலைகிறோம்.எங்கள் குழந்தைகளைநாங்கள் அவசியம் படிக்க வைப்போம்.பஸ்சில் எங்காவது போகவேண்டுமானால் ஊர் பெயர்என்னவென்று யாரையாவது கேட்டு செல்லவேண்டிய நிலையில் உள்ளோம்..எங்களில் நிறையபேருக்கு கைநாட்டு தான் வைக்க தெரியும்.இந்த நிலை மாற வேண்டும்.அதனால்தான்எங்கள் பிள்ளைகளை தொடர்ந்து பள்ளியில் படிக்க வைக்க தீவீர முயற்சிஎடுப்போம்.அவர்களையும் வரும் காலத்தில் பெரிய அரசு பணிகளில் அரசுஅதிகாரிகளாகவும், டாக்டர்களாகவும்  ஆக்குவோம் .பள்ளியில் தமிழக அரசு தரும்கல்வி உதவிகளையும் முழு அளவில் எங்கள் பிள்ளைகளுக்கு  பயன்படுத்தி கொள்வோம்.என பேசினார்கள். நரிகுறவ இன பெண்கள் குஷ்பு,ஜான்சி,சபீலா,ராதிகா,வனிதா,சுகன்யா,சுமதி மற்றும் நரிக்குறவ இன தலைவர் வேங்கையா உட்பட பலர்உடன்  இருந்தனர்.அவர்களது பிள்ளைகளை உடன் பள்ளியில் சேர்த்து விட்டுசென்றனர்.பிள்ளைகளும் சந்தோசமாக பள்ளியில் பாடம் படிப்பதாக கூறி பள்ளியில்படித்தனர்.பள்ளியின்  உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா ,ஆசிரியைகள்முத்துலெட்சுமி,செல்வமீனாள் ஆகியோரும் படிப்பின் அவசியத்தை எடுத்துகூறினார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி