பள்ளிகளில் கழிவறை கட்ட ரூ.100 கோடி நன்கொடை: டிசிஎஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

பள்ளிகளில் கழிவறை கட்ட ரூ.100 கோடி நன்கொடை: டிசிஎஸ்


நாடு முழுவதும் உள்ள மகளிர் பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக, 10,000 கழிவறைகள் கட்ட ரூ.100 கோடி நன்கொடையை மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இது குறித்து டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த"சுத்தமான இந்தியா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், மகளிர் பள்ளிகளில் கழிவறைகள் கட்ட எம்.பி.க்களும், பெருநிறுவனங்களும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து சுத்தமான இந்தியா திட்டத்துக்கு உதவும் முயற்சியாக இநத நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியின் மூலம் கட்டப்படும் கழிவறைகள், பெண் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி