8 மாதம் ஆகியும் வெளியிடப்படாத டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2014

8 மாதம் ஆகியும் வெளியிடப்படாத டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு.


டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் முடிவுவெளியிடப்படாததால் அரசு வேலையை எதிர்நோக்கியிருக்கும் 6 லட்சம் பட்டதாரிகள் தவிப்பில் உள்ளனர்.துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர் உட்பட 19 வகையான பதவிகளில் 1064காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 5.9.2013 அன்று அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கான முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். டிஎன் பிஎஸ்சி வெளியிட்ட கால அட்டவணையின்படி, தேர்வு முடிவு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அடுத்த கட்ட தேர்வான முதன்மைத் தேர்வு மே 10, 11-ந் தேதிகளிலும் நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் முதல்நிலைத் தேர்வு முடிவுகூட வெளியிடப்படவில்லை. இத்தனைக்கும் விடைத்தாள் மதிப்பீடு கணினி மூலமே செய்யப்படுகிறது. தேர்வு முடிந்து 6 மாதத்திற்குள் எப்படியும் முடிவு வெளியிடப்பட்டுவிடும் என்று எதிர்பார்த்து வந்த தேர்வர்கள் முடிவு தெரியாமல் தவிக்கிறார்கள்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் கூறியதாவது: மத்திய அரசுபணியாளர் தேர்வா ணையம் (யூபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) போன்ற தேர்வு வாரியங்கள் எல்லாம் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை வெளி யிட்டு விடுகின்றன. 8 மாதங் களுக்கு முன் நடத்தப் பட்ட முதல்நிலைத் தேர்வின் முடிவுகூட இன்னும் வெளியிடப் படவில்லை. எப்போது மெயின் தேர்வு நடத்தி, நேர்காணல் வைத்து கலந்தாய்வு நடத்தப்போகிறார்களோ தெரியவில்லை. டிஎன்பிஎஸ்சி இனியும் கால தாமதம் செய்யாமல் தேர்வு முடிவை விரைவாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். நிலவரம் குறித்து அறிய முயன்றபோது டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோரை தொடர்புகொள்ள முடியவில்லை.

4 comments:

  1. Tnpsc group 3 exam 3.8.2013 results what happened one year completed?(junior inspector of co operatives)

    ReplyDelete
  2. Mr tnpsc.. Grp2 coding sheets safe ah iruka?

    ReplyDelete
  3. எப்போ வேலை ?எப்போ வேலை ?எப்போ வேலை ?எப்போ வேலை ?எப்போ வேலை ? எப்போ இந்த விலையாட்டு முடியும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி