தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 87 பேர் கூடுதலாக தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2014

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 87 பேர் கூடுதலாக தேர்வு


தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 87 பேர் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு கூடுதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் இதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆக.17, 18ம் தேதிகளில் நடத்தப்பட்டது.

இதில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரி பார்ப்பு பணிகள் முடிந்த போதிலும் ஆசிரியர் நியமனம் தாமதமாகி வந்தது. வெயிட்டேஜ் தொடர்பாக பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஆசிரியர் நியமனம் இழுபறியாக இருந்தது.இந்நிலையில் கடந்த 10ம் தேதி தகுதித் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள்அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் பள்ளிக் கல்வித் துறையில் 772 பேர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து கூடுதலாக 87 பேர் தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு ள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி