பணியிடங்கள் காலி சிக்கலில் தேர்வுத்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

பணியிடங்கள் காலி சிக்கலில் தேர்வுத்துறை

தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையில் உள்ள தேர்வுத்துறையில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி தேர்வு, தேசிய திறனாய்வு தேர்வு, 25 வகையான தொழில் நுட்ப தேர்வுகள் உட்பட ஆண்டு தோறும் 42 வகையான தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் ஆண்டுதோறும் 35 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த தேர்வுத்துறையில் அதிகாரிகள் நிலையில் 30 பணியிடங்களும், 800 பணியாளர்களின் பணியிடங்களும் உள்ளன. இதில் ஏழு மண்டல செயலாளர்கள்,மூன்று துணை இயக்குனர்கள், இரண்டு கூடுதல் செயலாளர்கள் உட்பட 20 அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் உட்பட 200 பணியாளர்களின் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இவ்வளவு அதிகாரிகள், பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் தேர்வு முடிவு களை வெளியிடுவதில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.எனவே, தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3 comments:

  1. then whats the purpose of conducting TNPSC group IV examination without filling these kind of vacancy position? evangaliyum nambi nammum padikirom parunnga athuthan perriya thappu. oru annian vendum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி