பதவி இறக்கத்துக்கு வழிவகுக்கும் அரசாணை : புள்ளி இயல் துறை ஊழியர்கள் அதிருப்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

பதவி இறக்கத்துக்கு வழிவகுக்கும் அரசாணை : புள்ளி இயல் துறை ஊழியர்கள் அதிருப்தி.


புள்ளி இயல் ஆய்வாளர் பதவியை, உதவி ஆய்வாளராக பதவி இறக்கம் செய்ய, வழி வகுக்கும் அரசாணை, புள்ளிஇயல் துறை ஊழியர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பொருள் இயல் மற்றும் புள்ளி இயல்துறையில், 2013 ஜனவரியில், மறு சீரமைப்பு அமல்படுத்தப்பட்டது.

அப்போது, புள்ளி இயல் சார்நிலை பணியிடங்கள், 61 உட்பட, 197 பணியிடங்கள் ஒப்படைக்கப்பட்டு, 81 உயர்நிலை அலுவலர் பணியிடங்கள் பெறப்பட்டன.மறு சீரமைப்பை தொடர்ந்து, 'புள்ளி விவர சேகரிப்பு பணியில் ஈடுபடும், புள்ளி இயல் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு, ஐந்து ஆண்டுகள் தொடர் பணி, மூன்று ஆண்டு களப்பணி வேண்டும்' என, அரசாணை எண் 8 வெளியிடப்பட்டது. அதற்கு, ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து, 'உரிய காலத்தில், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' என, உயர் அதிகாரி கள் உறுதி அளித்தனர். இச்சூழ்நிலையில், 268 புள்ளி இயல் ஆய்வாளர் பணியிடங்களை, உதவி ஆய்வாளர்களாக பணியிறக்கம் செய்து, அரசாணை எண் 64 வெளியிடப்பட்டுள்ளது. இது, ஊழியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.'அரசாணை எண் 64ஐ ரத்து செய்ய வேண்டும்.

புள்ளி இயல் உதவி இயக்குனர் மற்றும் புள்ளி இயல் அலுவலர் பதவி உயர்வுக்கான குழுப்பட்டியலை வெளியிட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும்; 'புள்ளி இயல்ஆய்வாளர் பணியிடங்களில், 20 சதவீதம் நேரடி நியமனம் செய்ய வேண்டும்; தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தில், உரிய பணியிடங்களை வழங்க வேண்டும்;புள்ளி இயல் ஆய்வாளர்களுக்கு அடிப்படை ஊதியம், 7,000 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு புள்ளி இயல் சார்நிலை அலுவலர் சங்கம் சார்பில், சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் நேற்று, பெருந்திரள் முறையீடு கூட்டம் நடந்தது. சங்க மாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமையிடச் செயலர் ஜூலியஸ் செல்வம் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவநேசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி