இன்று முதல் துணை மருத்துவ படிப்பு கவுன்சலிங். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

இன்று முதல் துணை மருத்துவ படிப்பு கவுன்சலிங்.


துணை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கவுன்சலிங் இன்று தொடங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், நர்சிங், பி.பார்ம், பிபிடி, ரேடியோலஜி, பிசியோதெரபி உள்ளிட்ட 8 விதமான துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்காக 18 ஆயிரம் விண் ணப்பம் வினியோகம் செய்யப்பட்டது.இதில் 8 ஆயிரத்து 400 பேருக்கு கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென் னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நேற்று முதல் கவுன்சலிங் தொடங்கியது. நேற்று முதல்கட்டமாக, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் நடைபெற்றது. இன்று முதல் பொதுபிரிவினருக்கான கவுன்சலிங் நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி வரை கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி