ரிசர்வ் வங்கி அதிகாரி தேர்வு முடிவு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2014

ரிசர்வ் வங்கி அதிகாரி தேர்வு முடிவு வெளியீடு.


இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு-பி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்கட்டமாக ஆகஸ்ட் 3-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வெழுதியவர்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் (www.rbi.org.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். அடுத்த கட்ட தேர்வான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 13, 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.இதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில்மூலமாக விரைவில் அனுப்பப்படும். முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) ஆகியோருக்கு ரிசர்வ் வங்கி சார்பில் இலவசமாக முன் தேர்வு பயிற்சி அளிக்கப்படும். தகுதியுடைய நபர்கள் ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி