சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 175-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த சில வருடங்களாக சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளிவருவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனால் விரைவாக முடிவை வெளியிட வேண்டும் என்று மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் எதிர்பார்த்தனர்.
ஆன்லைன் மூலம் தேர்வு
இது தொடர்பாக தேர்வுத்துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவீர்களா? என்று கேட்டதற்கு துணைவேந்தர் ஆர்.தாண்டவன் கூறியதாவது:-
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித்துறையில் நடவடிக்கை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறையில் அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் தேர்வு முடிவுகளை 25 நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளோம்.
இன்னும் கூடுதல் வசதியாக மாணவ-மாணவிகள் ஆன்லைனில் கம்ப்யூட்டரிலேயே தேர்வு எழுதி, அந்த விடைகளை ஆசிரியர்களும் ஆன்லைனிலேயே மதிப்பீடு செய்து விரைவாக தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் முழுமையாக தயாரிக்கப்பட்டு அது சிண்டிகேட் கூட்டத்தில் வைத்து, முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.
அதிர்ச்சி தகவல் : ஆசிரியர் வேலை வாங்கி தாரேன் என கூறிய இடைத்தரகர்கள் ரகசியமாக பணத்தை ஒப்படைக்கிறார்களா??? - நீதி விசாரணை தேவை என புலம்பும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளுமா தமிழக அரசு???
ReplyDeleteSource From : The Hindu Covai Edition
தகவலை முலுமையாக பதிவிடுங்கல் நண்பரே!
Delete