ஆசிய முதியோர் தடகளம்: நிதியுதவிக்காக ஏங்கும் வீரர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2014

ஆசிய முதியோர் தடகளம்: நிதியுதவிக்காக ஏங்கும் வீரர்




வெற்றி பெற்ற பதக்கங்களுடன் விளையாட்டு வீரர் சாமுவேல்.

ஆசிய முதியோர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக நிதியுதவியின்றி தவிக்கிறார் 66 வயதாகும் வீரர் சாமுவேல்.

திருவள்ளூர் மாவட்டம், கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஏசுபாதத்தின் என்பவரது மகன் சாமுவேல் (66). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சாமுவேல் சிறுவயது முதல் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்.

திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஓட்டப் பந்தயத்தில் போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்றார்.

10-ஆம் வகுப்பு வரை படித்த சாமுவேல், சுவர் விளம்பரங்கள் வரையும் ஓவியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்கு லலிதா (57) என்ற மனைவியும், 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

தேசிய அளவிலான போட்டிகள்: கடந்த 2005-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதியோர் பிரிவினருக்கான போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். புதுச்சேரியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2006-இல் ராஜஸ்தானில் நடந்த அகில இந்திய நீளம் தாண்டுதல் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2007-ம் ஆண்டு ஹரியாணாவில் நடந்த நீளம் தாண்டுதலில் தங்கமும், மும்முறை தாண்டுதலில் வெண்கலமும் வென்றார். கடந்த 2008-ம் ஆண்டு அஸ்ஸாமில் நடைபெற்ற உயரம் தாண்டும் போட்டியில் வெள்ளியும், 2009-ம் ஆண்டு பஞ்சாப்பில் நடைபெற்ற 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளியும், அதே போட்டியில் 1,600 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் 3-வது இடத்தையும் சாமுவேல் பெற்றார்.

2010-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கமும், நீளம் தாண்டுதலில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற மும்முறை தாண்டுதலில் 3-வது இடத்தையும் சாமுவேல் பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது ஜப்பானில் நடைபெறவுள்ள 27 நாடுகள் பங்கேற்கும் ஆசிய முதியோர் தடகளப் போட்டியில் பங்கேற்க சாமுவேலுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அதற்கு தேவையான ரூ. 1.50 லட்சம் நிதியை இல்லாததால் அவரால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சாமுவேல் கூறியது: சிறுவயது முதல் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். இப்போது முதியோர் பிரிவு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளேன். இளமைப் பருவத்தில் இருந்து அதிமுக உறுப்பினராக உள்ளேன். தற்போது கைவண்டூர் பகுதி அதிமுக கிளைச் செயலாளராகவும் உள்ளேன். அக்டோபர் மாதம், ஜப்பானில் நடைபெறும் ஆசிய முதியோர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்கு எனக்கு அழைப்பு வந்தது. போட்டியில் பங்கேற்க ஜப்பான் செல்ல ரூ.1.50 லட்சம் செலவாகும்.

எனது குடும்பச் சூழலில் அந்த நிதியை திரட்ட முடியாத காரணத்தினால் சில சமூக ஆர்வலர்களிடம் உதவி கேட்டிருந்தேன். ஆனாலும் நிதி உதவி கிடைக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. முதிய வயதிலும் என்னைப் போன்ற வீரர்கள் போட்டியில் பங்கேற்று சாதிக்க முதல்வர் உதவி செய்யவேண்டும் என்றார் அவர்.

2 comments:

  1. Good Morning Mr.Alan,Munu Muru, Venkat, Mr, RED FIRE....
    we are all above 90 candidates. When we attended the first C.V. the below 90 people are quiet. They didnt expect that the announcement of our C.M. after the notification of the TET 2013. Nobody expect this. This is a pleasant shock to them. But it is a great shock to all the above 90 candidates. After the examination approximately one year how much strain we have.... waiting for the result... waiting for the C.V.announcement....waiting for the appointment order.....then shock news...appeal to the court...waiting for the judgement.....Government decision......Government officers playing dramas.....Each and everybody comments in the website. Daily 4 to 5 hours spent with the mobile phone watching make the eyes getting problem.....and atlast the Government decided after judgement from Madurai High Court in a fast track manner given appointment order to the 5% relaxation candidates.. How much painful these are!!!
    We are not against social justice. They can give 5% relaxation. But not for this exam. Government must follow the notifications. After 2013 TET they can implement the 5% relaxation.. Most of the 5% relaxation candidates also understood this. They are also said that,""""This is Government decision only. So you must question theGovernement.. But as a human being we can not miss the opportunity what we have now!!!"""".
    This is the fact. Please understand Mr. Santhosh SIR!!!...
    If we go to supreme court definitely all the above 90 candidates will win the case. Hence Our AMMA should decide to release the second list and fill up the post only all the above 90 candidates.. This is justice.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி