டி.ஆர்.பி. தேர்வில் எம்.சி.எஸ். பட்டதாரிகளை புறக்கணிக்கக் கூடாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2014

டி.ஆர்.பி. தேர்வில் எம்.சி.எஸ். பட்டதாரிகளை புறக்கணிக்கக் கூடாது

முதுநிலை நிறுவனச் செயலர் பட்டம் பெற்ற பட்டதாரிகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணிப்பதாக சென்னைப் பல்கலைக்கழகக் கழக கல்விக் குழுக் கூட்டத்தில் பேராசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்தப் படிப்புகள் எம்.காம். படிப்புக்கு இணையானதே என்பதை அரசுக்குத் தெரிவித்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவர பல்கலைக்கழகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

சென்னைப் பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டம் சனிக்கிழமை (செப்.27) நடைபெற்றது.

அப்போது உறுப்பினர் பேராசிரியர் வி. ரமேஷ் தீர்மானம் ஒன்றை முன்வைத்து பேசியது:

எம்.காம். பட்டதாரிகளை கல்லூரியில் நிறுவனச் செயலர் (சி.எஸ்.) துறையில் உதவிப் பேராசிரியராக நியமித்துக் கொள்ளலாம் என்பதும், எம்.காம். (நிறுவனச் செயலர்), எம்.சி.எஸ். (முதுநிலை நிறுவனச் செயலர் பட்டம்), எம்.ஏ. (நிறுவனச் செயலர்) பட்டங்கள் பெற்றவர்களை வணிகவியல் துறையில் (பி.காம்., எம்.காம்.) உதவிப் பேராசிரியர்களாக நியமித்துக் கொள்ளலாம் என்பதும் அனைத்து அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. பல்கலைக்கழகத்தின் கல்வி வாரியம், ஆட்சிமன்றக் குழு, கல்விக் குழு ஆகியவையும் இந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) அண்மையில் நடத்திய கல்லூரி வணிகவியல் துறைக்கான உதவிப் பேராசிரியர் பணியிடத் தேர்வில் எம்.சி.எஸ். பட்டதாரிகள் தகுதியற்றவர்களாகக் கூறி புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

எம்.காம். பட்டதாரிகள் மட்டுமே தகுதியானவர்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு, பேராசிரியர் தேர்வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான எம்.சி.எஸ்., எம்.காம். (சி.எஸ்.), எம்.ஏ. (சி.எஸ்.) பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்தப் படிப்புகள் அனைத்தும் எம்.காம். முதுநிலை பட்டத்துக்கு இணையானதே என்பதை அரசுக்குத் தெரிவித்து, அதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதே கருத்தை மேலும் சில பேராசிரியர்களும் கல்விக் குழுவில் வலியுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கல்விக் குழுத் தலைவரும், பல்கலைக்கழகத் துணைவேந்தருமான தாண்டவன் கூறினார்.

2 comments:

  1. Good Morning Mr.Alan,Munu Muru, Venkat, Mr, RED FIRE....
    we are all above 90 candidates. When we attended the first C.V. the below 90 people are quiet. They didnt expect that the announcement of our C.M. after the notification of the TET 2013. Nobody expect this. This is a pleasant shock to them. But it is a great shock to all the above 90 candidates. After the examination approximately one year how much strain we have.... waiting for the result... waiting for the C.V.announcement....waiting for the appointment order.....then shock news...appeal to the court...waiting for the judgement.....Government decision......Government officers playing dramas.....Each and everybody comments in the website. Daily 4 to 5 hours spent with the mobile phone watching make the eyes getting problem.....and atlast the Government decided after judgement from Madurai High Court in a fast track manner given appointment order to the 5% relaxation candidates.. How much painful these are!!!
    We are not against social justice. They can give 5% relaxation. But not for this exam. Government must follow the notifications. After 2013 TET they can implement the 5% relaxation.. Most of the 5% relaxation candidates also understood this. They are also said that,""""This is Government decision only. So you must question theGovernement.. But as a human being we can not miss the opportunity what we have now!!!"""".
    This is the fact. Please understand Mr. Santhosh SIR!!!...
    If we go to supreme court definitely all the above 90 candidates will win the case. Hence Our AMMA should decide to release the second list and fill up the post only all the above 90 candidates.. This is justice.....

    ReplyDelete
  2. தமிழ் நாட்டில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

    தாய் மொழி தமிழில் அல்ல தமிழையே பாடமாக படித்தவர்களுக்கு பதவி வாய்ப்பு இல்லை .

    1. காலி பணியிடங்கள் 66% பதவி உயர்வின் மூலம் நிரப்ப படுகிறது .

    2. ரோஸ்டர் முறையில் தமிழ் மொழிக்கு கடைசி இடம் .

    3. ஆசிரியர் மாணவர்கள் விகிதாசாரம் 1: 45 என்பது தமிழுக்கு மட்டுமே ?

    4. தமிழ் மொழியில் வாசிப்பு திறன் குறைவாய் உள்ளதற்கு காரணம் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையே .

    5. அனைத்து CBSC பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என அரசு அறிவிப்பு .

    மேற்கண்ட அனைத்து காரணங்களை வலியுறுத்தி காலி பணியிடங்களை அதிகரிக்க வழக்கு தொடர உள்ளோம் . மற்ற பாட பிரிவை சேர்ந்த ஆசிரியர்களும் வழக்கு தொடர உள்ளார்கள் .

    மேற்கண்ட காரணங்களை பற்றிய அதிக விவரங்கள், அரசு G O , தகவல்கள் தங்களிடம் இருந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்

    இந்த வாய்ப்பை தவற விட்டால் 90 மதிப்பெண் பெற்ற நாம் எப்பொதும் பணி பெற இயலாது .

    சட்டத்தால் மட்டுமே இழந்த நம் பணி வாய்ப்பை மீண்டும் பெற முடியும்,

    இது பற்றிய அறிவிப்பு சில தினங்களில் வெளி வரும்.

    அனைவரும் தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்களை SMS முலம் பதிவு செய்து கொள்ளவும் ( தொடர்பு கொள்பவர்கள் நிறைய இருப்பதால் அனைவருடனும் பேச முடியாத காரணத்தினால் )


    தொடபுக்கு :

    சேலம் -- தருமபுரி -- கிருஷ்ணகிரி : 7598000141

    புதுக்கோட்டை : 9943228971

    வேலூர் : 7220724755

    திருவண்ணாமலை :7639497834

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி