சென்னை உயர் நீதிமன்ற பணிகள் திறனறி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2014

சென்னை உயர் நீதிமன்ற பணிகள் திறனறி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் நேர்முக உதவியாளர், உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி நடத்தப்பட்டது.
இதில் திறனறித் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3,631 விண்ணப்பதாரர் பட்டியல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் ஜூலை 12, 13, 14, 15ம் தேதிகளில் திறனறி தேர்வு நடைபெற்றது. திறனறி தேர்வுக்கு வராத 1,360 விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 27, 28ம் தேதிகளில் தரமணியில் உள்ள மைய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தரமணி மாநில வணிகவியல் கல்வி நிறுவனம் ஆகிய தேர்வுக்கூடங்களில் திறனறி தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளமான

www.tnpscexams.net
மற்றும்
www.tnpsc.gov.in

வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து ஹால் டிக் கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தொடர்புக்கு 1800 425 1002

2 comments:

  1. காலை வணக்கம்
    நண்பர்களே
    இன்னும் 10 நாட்கள் தானே
    1 வருடம் பொருத்த நமக்கு
    இது கடினமல்ல்ல.
    கடுமையாக இறைவனிடம் வேண்டுவோம்,
    பொருத்ததார் பூமி ஆள்வார்.

    ReplyDelete
  2. Unselected candidates Nambikkaiyodu irungal. Vetri ungalukke

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி