தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க பதவியேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2014

தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க பதவியேற்பு



தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் பதவிஏற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம்செய்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன், மோகன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் கிருஷ்ணமூர்த்தி , வேலுமணி, சின்னையா , கோகுல இந்திரா, சுந்தர்ராஜ், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தூர் பாண்டியன், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், செந்தில் பாலாஜி, சம்பத், உதயகுமார், முக்கூர் என்.சுப்ரமணியன், ராஜேந்திர பாலாஜி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம் உள்ளிட்டோரும் கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் கடந்துவந்த பாதை

அ.தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதலே உறுப்பினராக இருந்து வரும் ஒ. பன்னீர்செல்வம்,கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் ஒ.பன்னீர்செல்வம் இணைந்து செயலாற்றி உள்ளார்.பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் ஆரம்பக் காலத்தில் பதவி வகித்துள்ளார். தேனிமாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்.டான்சி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காரணத்தால், தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலக நேரிட்டது. இதையடுத்து, ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக 2001-ம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்றார்.

இந்நிலையில், தற்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. இதையடுத்து, 2-வது முறையாக, ஓ.பன்னீர் செல்வம், தமிழகமுதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

8 comments:

  1. Reasons for crying? What happened to our CM?

    ReplyDelete
  2. ஹாய் குடிவினிங் எவரிபடி

    ReplyDelete
  3. Tet kku prepare seiya thirantha en kangal,
    Emaatram kanda pinbum mooda marukkirathu virakthiyodu. . Tamil natil thanneeruku panjam irukku,. Aanal
    Indha iravu nerathilum, en kannerukku mattum, panjam illaiye !!!
    En nimmadhiyum, thookkathayum
    Yaar koduppargal?

    ReplyDelete
  4. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில். தர்மமே வெல்லும்

    ReplyDelete
  5. I was suggested this blog by my cousin. I am not sure whether this post is written by him as no one else know such detailed about my difficulty. You are wonderful! Thanks!www.hertzsupercars.net |

    ReplyDelete
  6. I am very happy to discover your post as it will on top in my collection of favorite blogs to visit.yellowathome.net |

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி