தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் பதவிஏற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம்செய்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன், மோகன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும் கிருஷ்ணமூர்த்தி , வேலுமணி, சின்னையா , கோகுல இந்திரா, சுந்தர்ராஜ், எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தூர் பாண்டியன், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், செந்தில் பாலாஜி, சம்பத், உதயகுமார், முக்கூர் என்.சுப்ரமணியன், ராஜேந்திர பாலாஜி, பி.வி.ரமணா, கே.சி.வீரமணி, எம்.எஸ்.எம். ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம் உள்ளிட்டோரும் கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் கடந்துவந்த பாதை
அ.தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதலே உறுப்பினராக இருந்து வரும் ஒ. பன்னீர்செல்வம்,கட்சியின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் ஒ.பன்னீர்செல்வம் இணைந்து செயலாற்றி உள்ளார்.பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகவும் ஆரம்பக் காலத்தில் பதவி வகித்துள்ளார். தேனிமாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்துள்ளார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்.டான்சி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காரணத்தால், தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலக நேரிட்டது. இதையடுத்து, ஓ. பன்னீர் செல்வம் முதலமைச்சராக 2001-ம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்றார்.
இந்நிலையில், தற்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. இதையடுத்து, 2-வது முறையாக, ஓ.பன்னீர் செல்வம், தமிழகமுதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
Reasons for crying? What happened to our CM?
ReplyDeleteGud eve Kalvi seithi.
ReplyDeleteஹாய் குடிவினிங் எவரிபடி
ReplyDeleteTet kku prepare seiya thirantha en kangal,
ReplyDeleteEmaatram kanda pinbum mooda marukkirathu virakthiyodu. . Tamil natil thanneeruku panjam irukku,. Aanal
Indha iravu nerathilum, en kannerukku mattum, panjam illaiye !!!
En nimmadhiyum, thookkathayum
Yaar koduppargal?
Hsi god ftiends.
ReplyDeleteதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில். தர்மமே வெல்லும்
ReplyDeleteI was suggested this blog by my cousin. I am not sure whether this post is written by him as no one else know such detailed about my difficulty. You are wonderful! Thanks!www.hertzsupercars.net |
ReplyDeleteI am very happy to discover your post as it will on top in my collection of favorite blogs to visit.yellowathome.net |
ReplyDelete