‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2014

‘தூய்மையான இந்தியா’ திட்டத்தை கல்வி நிறுவனங்கள் செயல்படுத்த உத்தரவு.


’மத்திய அரசின் ’தூய்மையான இந்தியா’ திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்கள் இன்று முதல் செயல்படுத்த வேண்டும்’ என அனைத்து பல்கலைகள், கல்லூரிகளுக்கு பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவின் போது, ’ஸ்வச்சா பாரத் அபியான்’ என்ற ’தூய்மையான இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். த்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் இத்திட்டத்தை கல்லூரிகள், பல்கலைகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும்செயல்படுத்தும்படி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதம்: இத்திட்டத்தை அக்., 2ம் தேதி துவக்க வேண்டும்; பொது சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் விவாதம், கட்டுரைப் போட்டி, புகைப்பட கண்காட்சியை நடத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பகுதிகளில், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தெருக்களை சுத்தப்படுத்துவதுடன், பொது சுகாதாரம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த கடிதப்படி, உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என, யு.ஜி.சி.,யும் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி