பள்ளி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கிய அமைச்சர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2014

பள்ளி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கிய அமைச்சர்!



மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமை சூழலை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.இத்திட்டத்தின் வெற்றிக்கு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஆகிய அனைவரின் பங்களிப்பும் கோரப்பட்டது.தங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் மனநிலையை, மாணவர்களிடம், இத்திட்டம் உருவாக்கும். இத்திட்டத்தின் மூலம், அதிகமான பசுமை சூழலைக் கொண்டிருக்கும் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

பள்ளிகள், green ranking meter மூலம் மதிப்பிடப்படும் மற்றும் இதனால், அவை தங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வைப் பெறும்.அக்டோபர் 31ம் தேதி வரை தொடர்ச்சியாக செயல்பாட்டில் இருக்கும் இத்திட்ட நடைமுறையின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையே, திருப்தியான வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என்ற உண்மை, மாணவர்களுக்கு உணர வைக்கப்படும். மேலும், இத்திட்டத்தின் மூலம், கழிப்பறை வசதியில்லாத பள்ளிகள் என்ற அவலத்தை நீக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறுகூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி