பதவி உயர்வு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அக்.25 ல் கலந்தாய்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2014

பதவி உயர்வு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அக்.25 ல் கலந்தாய்வு.


ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவதற்குரிய முன்னுரிமை பட்டியல், கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. 2008 ம் ஆண்டு, டிச., 31யை தகுதி நாளாக கொண்டு இப்பட்டியலில் 195 பேர் இடம் பெற்றனர்.
இதில், ஒன்று முதல் 30 வரை உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட்டது. மீதம் உள்ளோருக்கு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது முன்னுரிமை பட்டியலில் 31 முதல் 160 முடிய உள்ள தகுதி வாய்ந்த நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல் மூலம், உதவி தொடக்க கல்வி அலுவலர், கூடுதல்உதவி தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது. கலந்தாய்வு, அக்.,25ல், சென்னை தொடக்க கல்வி இயக்க கூட்டரங்கில், காலை 10க்கு நடக்கிறது, என தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி