திருவள்ளூரில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2014

திருவள்ளூரில் 8 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு!!


திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும்8உயர்நிலைப் பள்ளிகள்2014-15-ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம்132அரசு உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.இதில்15-க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என அந்தப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில்2014-15-ஆம் கல்வி ஆண்டில்8பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் கூறியது: இந்த மாவட்டத்தில் உள்ள பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள பூதூர், புதுகும்மிடிப்பூண்டி, ஞாயிறு ஊராட்சி ஆகிய இடங்களில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.அதேபோல் திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் உள்ள சென்னீர்குப்பம், வெங்கல், மெய்யூர், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளிகளும், திருவள்ளூரில் உள்ள காமூனா சகோதரர்கள் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆகிய 8 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், விரைவில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி