ஷாஜஹானின் தோட்டம் டில்லியில் கண்டுபிடிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

ஷாஜஹானின் தோட்டம் டில்லியில் கண்டுபிடிப்பு

டில்லியில் உள்ள, வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையில், புதைந்து போன, ஷாஜஹான் அமைத்த தோட்டத்தை, இந்திய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
கடந்த 1638ல், முகலாய மன்னராக இருந்த ஷாஜஹான், தன் அரசின் தலைநகரை, ஆக்ராவில் இருந்து டில்லிக்கு மாற்ற திட்டமிட்டு, அதற்காக, 1639ல், தற்போதுள்ள செங்கோட்டையை கட்டுவதற்கு அடித்தளமிட்டார். 1648, ஏப்ரல் 16ல், கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.கோட்டை வளாகத்தில், அரண்மனைகள் தவிர, தோட்டம் மைக்கப்பட்டுள்ளது. இதில், பலவித பழ மரங்கள், மனதை மயக்கும் நறுமண பூச்செடிகள், கொடிகள், வளர்க்கப்பட்டன. மல்லிகை, முல்லை, அல்லி, சம்பங்கி, கனகாம்பரம் உள்ளிட்ட மலரினங்கள் இருந்தன.கடந்த 1857ல், செங்கோட்டை யை கைப்பற்றிய ஆங்கி லேயர்கள், அங்கிருந்த தோட்டத்தை மண் நிரப்பி, ராணுவ அணிவகுப்பு மைதானமாக மாற்றினர். சில ஆண்டு களுக்கு முன், நூலகத்தில் இருந்து, 1857
ஆண்டுக்கு முந்தைய ஆவணம், இந்திய தொல்லியல்துறையினருக்கு கிடைத்தது.அந்த ஆவணத்தின்படி, கோட்டைக்குள் இருந்த தோட்டம் குறித்த தகவல் கிடைத்தது.புதைந்து கிடந்த அந்த தோட்டத்தை, வெளியில் கொண்டு வரும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதன் பின், அந்த தோட்டம் பழையபடி பராமரிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி