வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர், ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர், ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை.


அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள கனரக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய பணிகளுக்கு இரண்டையும் பதிவு செய்துள்ளஅனைத்து பதிவுதாரர்களும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில்தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

இந்நிலையில் தங்கள் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்துகொள்வதற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகிற 28-ம் தேதி நேரில் வரவேண்டும். அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கனரக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமங்கள், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை ஆகியவைகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி