பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2014

பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிப்பு.


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க அரசு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
செப்., 25 முதல் அக் 4 வரை பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுதிய தனி தேர்வர்கள், தேர்வு எழுதிய மையத்திலேயே மதிப்பெண் சான்றிதழைப் பெற்று கொள்ளலாம். அதேபோல் மார்ச்,ஏப்., ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அக்., 10 முதல் நவ., 7 வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு துறை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இதற்காக விருதுநகர் கல்வி மாவட்டத்தில் கே.வி.எஸ்., மேல்நிலை பள்ளியில் ஆண்கள், சத்திரியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்கள், சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி. மேல்நிலை பள்ளியில் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் எஸ்.பி.கே., மேல்நிலை பள்ளியில் ஆண்கள், எஸ்.பி.கே., பெண்கள் பள்ளியில் பெண்கள், திருச்சுழி டி.யு.என்.எஸ்.வி., பள்ளியில் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் ஜி.எஸ்., இந்து பள்ளியில் ஆண்கள்,இருதய பெண்கள் மேல்நிலை பள்ளியில் பெண்கள், ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலை பள்ளியில் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி