பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2014

பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு


வால்பாறையில் உள்ள பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளில், கோவை மாவட்டகூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா நேரில் ஆய்வு நடத்தினார்.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.ஏ., அலுவலகம், எஸ்.எஸ்.ஏ., உண்டு உறைவிடப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்தினார்.ஆய்வின்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி உள்ளதா மற்றும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும் நேரில் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது எஸ்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், விஜயலட்சுமி, வால்பாறை மேற்பார்வையாளர் (பொ) ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி