தமிழகத்தில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை, திருச்சி, திருவாரூர், கரூர், நாகை,, திருப்பூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, ஈரோடு, தூத்துக்குடி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
vijayakumar chennai sir. second list posting counseling eppo for bt.
ReplyDeletemay be on november 2 week posting
ReplyDelete