சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கிறது TNPSC - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2014

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கிறது TNPSC


டி.என்.பி.எஸ்.சி. தொகுதி நான்கில் அடங்கிய இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III பதவிகளுக்கு உரித்த காலிப் பணியிடங்களுக்கான, நான்காம், மூன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதி வரை, TNPSC அலுவலகத்தில் நடைபெறும்.
கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருவோர், தேவையான ஆவணங்களை கட்டாயம் எடுத்துவர வேண்டும். மேலும், தமிழ் வழியில் பயின்ற சலுகையைப் பெற, அதற்கான சான்றுகளைப் பெற்றுவர வேண்டும். இதில் கலந்துகொள்ள தவறுவோருக்கு, கட்டாயம் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

இதுகுறித்த அனைத்து விபரங்களும் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி