தீயணைப்பு துறையில் 1,000 காலி பணியிடங்கள்: மூன்று மாதங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2014

தீயணைப்பு துறையில் 1,000 காலி பணியிடங்கள்: மூன்று மாதங்களில் ஆட்களை நியமிக்க நடவடிக்கை

''தீயணைப்புத் துறையில், காலியாக உள்ள 1,000 பணியிடங்கள், மூன்று மாதங்களில் நிரப்பப்படும்,'' என, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி இயக்குனர், ரமேஷ் குடவாலா தெரிவித்தார்.

ரூ.18 கோடி:


மதுரையில், அவர் கூறியதாவது: தீயணைப்புத் துறைக்கு, அரசு, 18 கோடி ரூபாய் வழங்கியது. இதைக்கொண்டு நுரை தள்ளும் வண்டி ஐந்து மற்றும் 30 நீர் வண்டிகள் வாங்கப்பட உள்ளன. அனைத்து மாவட்ட அலுவலங்களுக்கும், 'இன்டர்நெட்' வசதி செய்யப்பட்டு உள்ளது. தீயணைப்புத் துறையில், 1,000 காலி பணியிடங்கள் உள்ளன. சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், மூன்று மாதங்களில் நிரப்பப்படும். சர்வீஸ் அடிப்படையில், வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 308 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றில், வாடகை கட்டடங்களில் இயங்கும், 72 நிலையங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு, இரண்டு நிலையங்கள் சொந்த கட்டடங்களுக்கு மாற்றப்படுகின்றன.

மாதம் இருமுறை:


வீரர்கள், மாதத்திற்கு இருமுறை, 'மாஸ் டிரில்' செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. சிவகாசி பட்டாசு ஆலைகளில், வெடிமருந்து பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது, தீயணைப்புத் துறையினரையும் அழைத்துச் செல்ல வேண்டும் போன்ற பரிந்துரைகளும், அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. எஸ்.எம்.எஸ்., மூலம், தகவல் தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். சென்னை பாலவாக்கத்தில், 12.84 ஏக்கரில், நவீன வசதிகளுடன் பயிற்சி மையம் அமைகிறது. மதுரையில், மண்டல பயிற்சி மையம் துவங்க, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

3 comments:

  1. Sri sir bt 2nd varavay varatha ilai, sirithu kalam kalithu vara vaaipu ullatha

    ReplyDelete
  2. திரு.ரமேஷ்குடவாலா IPS ன் மகன்தான்
    வெண்ணிலா கபடிக்குழு பட ஹீரோ.

    ReplyDelete
  3. Vijay sir melay nan ktathuku ans plz

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி