அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுஇணையதளம் வாயிலாக நவம்பர் 2-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுஅனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் இணையதளம் மூலம் நவம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.
இதில் 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னுரிமைப் பட்டியலில் வரிசை எண் 494 முதல் 600 வரையில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம்.ஏற்கெனவே (2014-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி) நடைபெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டு ஆணை பெற வேண்டியவர்கள், அந்தந்த மாவட்ட கலந்தாய்வு மையத்துக்குச் சென்று அங்குள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பதவி உயர்வு ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி