இசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவுஇசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்கஇசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவுளை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2014

இசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவுஇசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்கஇசை, ஓவியம், தையல்கலை சிறப்பாசிரியர்களை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவுளை போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்ய உத்தரவு

இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகியவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
இப்போது சிறப்பாசிரியர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.


கடந்த 2012-ஆம் ஆண்டில், 1,028 சிறப்பாசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.


இந்தப் பட்டியலில் இடம்பெறாத ஒருவர் தொடர்ந்த வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். போட்டித் தேர்வு, நேர்காணல் மூலம் சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிறப்பாசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான வழிமுறைகளை அறிவிக்குமாறு அரசுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.


இதையடுத்து, சிறப்பாசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:


சிறப்பாசிரியர் நியமனத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்குப் பதிலாக, போட்டித் தேர்வு முறை பின்பற்றப்பட வேண்டும்.


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களிலிருந்து தகுதியான நபர்கள் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்க வேண்டும்.


போட்டித் தேர்வு 95 மதிப்பெண்ணுக்கும், நேர்காணல் 5 மதிப்பெண்ணுக்கும் நடைபெறும். போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு ஆசிரியர்கள் அழைக்கப்பட வேண்டும்.


இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தயாரிக்கும். இந்தத் தேர்வில் 190 "அப்ஜெக்டிவ் டைப்' வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு விடைக்கும் அரை மதிப்பெண் வழங்கப்படும்.


இத் தேர்வுக்கான கட்டணம் ரூ.500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பிரிவினருக்கு ரூ.250.


நேர்காணல் மதிப்பெண் விவரம்:


1. கூடுதல் தகுதி - அரை மதிப்பெண்


2. அரசுத் துறை தவிர துறைகளில் பெற்றுள்ள அனுபவம் - அரை மதிப்பெண்


3. அரசுத் துறைகளில் அனுபவம் - 1 மதிப்பெண்


4. என்.சி.சி., என்.எஸ்.எஸ்., விளையாட்டுகள் - ஒன்றரை மதிப்பெண்


5. ஆளுமை, தோற்றம் - ஒன்றரை மதிப்பெண்


மொத்தம்-5 மதிப்பெண்கள்

1 comment:

  1. Dear brother, congrats for your fire. This is lead to permanent job also. This like that the 652 VOCATIONAL COMPUTER INSTRUCTOR is only allotted for Aided school vocational computer teachers. BUT LATERAL ENTRY B.ED CANDIDATE WANT TO TAKE THAT PLACE. WE ALSO WAITING FOR IT, THE REMAINING POST MAY GO TO B.ED CANDIDATES. Because they all are working from 2000,....2005...2008.....2014-15 and also full time teaching and not teaching (data entry also). But that peoples are not get permanent salary up to date. YOUR TEEM IS THE ROLL MODEL OF THAT TEAM. WE MUST WIN THAT PRAY . GOD WITH US.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி