ஜனவரி 12ல் பிஎப் முகாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2014

ஜனவரி 12ல் பிஎப் முகாம்


சென்னை மண்டல பி.எப் சிறப்பு முகாம் வரும் ஜனவரி 12ம் தேதி ராயப்பேட்டை அலுவலகத்தில் நடைபெறுகிறது. மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மண்டல பி.எப் அலுவலகம் சார்பில் தொழிலாளர்களின் பி.எப் குறைகளை தீர்க்க மாதந்தோறும் “பவிஷ்யா நிதி அதாலத்’’ என்ற சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ராயப்பேட்டையில் உள்ள பி.எப் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயர்களை பி.எப் செய்தி தொடர்பாளரிடம் வரும் 31ம் தேதிக்குள் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி