அரையாண்டு தேர்வுக்கு சிறப்பு 'ஆன்சர் கீ': கல்வித்துறை ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

அரையாண்டு தேர்வுக்கு சிறப்பு 'ஆன்சர் கீ': கல்வித்துறை ஏற்பாடு


"மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான சிறப்பு 'ஆன்சர் கீ' தயாரிக்கப்பட்டு அதன்படி விடைத்தாள் திருத்தப்படும்" என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கல்வி மாவட்ட அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி (மதுரை), லோகநாதன் (மேலுார்), ராமகிருஷ்ணன் (உசிலம்பட்டி) பங்கேற்றனர்.ஆஞ்சலோ இருதயசாமி பேசியதாவது: பிளஸ் 2 தேர்வு 275 மையங்களில் நடக்கின்றன. மைய எண்கள், மையங்களின் இணைப்பு பள்ளிகள் உட்பட பல்வேறு தகவல்களை தலைமையாசிரியர்கள் சரியாக அளிக்க வேண்டும். ஏதாவது மாற்றம் இருந்தால் உடனடியாக திருத்தம் செய்யலாம்.

மாணவர்களுக்கு தனித்தனியே ஆசிரியர் குழு ஏற்படுத்தி சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும். பாடம் வாரியாக சிறப்பு வினா- விடை தயாரித்து வழங்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை மாவட்ட அளவில் சிறப்பு 'ஆன்சர் கீ' தயாரித்து அதன்படி திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி