ஆட்சி மொழியாக தமிழ் கிடையாது: பார்லியில் மத்திய அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2014

ஆட்சி மொழியாக தமிழ் கிடையாது: பார்லியில் மத்திய அரசு அறிவிப்பு

தமிழ் உட்பட எந்தவொரு மொழியையும், மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை' என, பார்லிமென்டில் நேற்று திட்டவட்டமாக, அமைச்சர் கூறினார்.

ராஜ்யசபாவில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன், 'தமிழ் மொழியை ஆட்சி மொழியாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என கொண்டு வந்த, தனிநபர் விவாதத்தில் குறுக்கிட்டு பேசிய, மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி கூறியதாவது: மத்திய அரசின் ஆட்சி மொழியாக, இப்போது ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளது. கூடுதலாக ஒரு மொழியை சேர்க்க வேண்டும் என்றால், அரசியல் அமைப்புச் சட்டத்தின், 346வது பிரிவை திருத்த வேண்டும். அதற்கு, பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வரும். எனவே, தமிழ் உட்பட எந்தவொரு மாநில, வட்டார மொழியையும், மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழகத்தை சேர்ந்த மற்றொரு எம்.பி., 'சென்னை உயர் நீதிமன்றத்தின், நீதிமன்ற மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் சவுத்ரி, ''இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டின், அரசியல் அமைப்பு அமர்வின் பரிசீலனையில் உள்ளது,'' என்றார். திருவள்ளுவர் பிறந்த தினத்தை, தேசிய மொழி நாளாக கொண்டாட வேண்டும் என்ற தமிழக எம்.பி.,க்களின் கோரிக்கையையும் மத்திய அரசு நிராகரித்தது. ''திருவள்ளுவர் பிறந்த தினத்திற்கு அந்த அந்தஸ்து கொடுத்தால், பல அறிஞர்களும் அந்த பெருமையை எதிர்பார்ப்பர். இதனால் குழப்பம் ஏற்படும்,'' என, அமைச்சர் ஹரிபாய் சவுத்ரி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி