இனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும் தான்- தமிழக அரசு அரசாணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 23, 2014

இனி 'வணக்கத்திற்குரிய' இல்லை: 'மாண்புமிகு' மட்டும் தான்- தமிழக அரசு அரசாணை


தமிழகத்தில் உள்ள மேயர்களை இனி வணக்கத்திற்குரிய என்று அழைக்காமல், மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சி உட்பட 10 மாநகராட்சி மேயர்களும், வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கடந்த, 10ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 157ல், இனி மாநகராட்சிமேயர்களை, 'வணக்கத்திற்குரிய' என்று அழைக்காமல், 'மாண்புமிகு மேயர்' என்றுதான் அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இந்த அரசாணை, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி