ஆலோசனை மையத்தில் மாணவ, மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் தனித்தனியே அவசியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2014

ஆலோசனை மையத்தில் மாணவ, மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் தனித்தனியே அவசியம்


தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசனை மையத்தில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே ஆண், பெண் என 2 உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்களின் மனஅழுத்தம், உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ‘நடமாடும் உளவியல் ஆலோசனை மையங்கள்‘ தொடங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 3 அல்லது 4 மாவட்டங்களை ஒரு மண்டலமாக பிரித்து, 10 மண்டலங்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலத்திற்கும், தலா ஒருஉளவியல் நிபுணர்கள் வீதம் மொத்தம், 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 3 பெண் மற்றும் 7 ஆண் வீதம் உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை ஒருங்கிணைத்து, ஒரு மண்டலமாக பிரித்து, மாணவ, மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதில் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்பது குறித்து மட்டுமே, 80 சதவீத ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு, உடல் ரீதியான மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண உளவியல் நிபுணர்கள் அமர்த்தப்பட்டாலும், இதுபற்றி ஆலோசனைகள் மாணவர்களுக்கு சரிவரவழங்கப்படுவதில்லை. காரணம், ஆண் உளவியல் நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள மண்டலங்களில் மாணவிகளும், பெண் உளவியல் நிபுணர்கள்உள்ள மண்டலங்களில் மாணவர்களும், தங்கள் பாலியல் ரீதியான குழப்பங்களுக்குவிளக்கங்களை வெளிப்படையாக கேட்கவும், தெரிந்துகொள்ளவும் முடியாத நிலை உள்ளது. இதனால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என பெற்றோர், ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் பாலியல் மற்றும் உடல் ரீதியான பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இதுபற்றி பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ சொல்ல தயங்குகின்றனர்.

இதற்கு உளவியல் நிபுணர்களின் ஆலோசனை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இதுபோன்ற சந்தேகங்களை, பெண் உளவியல் நிபுணரிடம் கேட்டறிந்துகொள்ள தயக்கம் காண்பிக்கின்றனர். மாணவிகளுக்கும் இதே நிலை தான் உள்ளது. இதனால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஒவ்வொரு மண்டலத்துக்கும், ஆண் மற்றும் பெண் என 2 உளவியல் நிபுணர்களை நியமித்து மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி