தனியார் கல்லூரிகளில் பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவை நியமித்துள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு உதவி பெறாத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கத்தின் தலைவர் எஸ்.செல்வமணி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில்,உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது.அதில், பாலிடெக்னிக் கல்லூரிகள் விடுபட்டன. எனவே, தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்கு குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, கட்டண நிர்ணயக் குழு அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில், தமிழக அரசின் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைத்து, கடந்த மாதம் 18-ஆம்தேதி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.கட்டணம் தொடர்பாக குழு அளிக்கும் பரிந்துரைகள் எதுவாக இருந்தாலும் அதை நிறைவேற்ற அரசு துறைகள் தயாராக உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி