மாவட்ட அளவிலான கணித திறனறி போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் சிறப்பிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2014

மாவட்ட அளவிலான கணித திறனறி போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் சிறப்பிடம்


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பாக கடந்த 07/12/2014 அன்று கோவை மண்டல அறிவியல் மையத்தில் கணித திறனறி போட்டிநடைபெற்றது. இதில் கோவை,ஈரோடு,பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள, 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் 560 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பங்கு பெற்ற மாணவர்கள்மிக மிக நன்று, மிக நன்று, நன்றுஎன மூன்று பிரிவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டனர்.இதில் மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவிகள்சுபானு,காருண்யா (ஐந்தாம் வகுப்பு),கீர்த்தனா(ஆறாம் வகுப்பு),திவ்யதர்ஷினி(ஏழாம் வகுப்பு),மாணவர்கள் லோகேஸ்வரன், ஜவஹர்(எட்டாம் வகுப்பு) ஆகியோர்நன்றுபிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை தலைமையாசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டினர்.

புகைப்படக் குறிப்பு:
பரிசு பெற்ற மாணவர்களுடன் ஆசிரியர் ரவிக்குமார், DR.சீனிவாசன் ( பெரியார் அறிவியல் மையம்,சென்னை), DR.அழகிரிசாமிராஜா (திட்ட இயக்குநர், கோவை மண்டல அறிவியல் மையம்),K.G.குமார்(இயக்குநர், விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப மையம்,பெங்களூரு), DR.ஐயம்பெருமாள் (இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்,சென்னை) மற்றும் பள்ளியின் கணித ஆசிரியர் திருமுருகன்.

நன்றி,
திரு.ஜெ.திருமுருகன்,
கணித பட்டதாரி ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
மூலத்துறை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி